Monday, January 31, 2011

இது தான் காதல் …. ithu thaan kaathal ena…


என்

இரவுகளில் கவிதை சரளமாய் கசிந்த போது 
-எனக்கு புரியவில்லை… 
எலும்புகளிற்க் கிடையே, இதயத்தில் உன் வாசம் வீசியபோது 
-எனக்கு புரியவில்லை… 
என் நினைவுகளில் உன் நளினம் என்னை நனைத்தபோது 
-எனக்கு புரியவில்லை… 
இது தான் காதல் என எனக்கு எதுவுமே தெரிந்ததில்லை… 
நீ இல்லையென நினைக்க, 
என் நெஞ்சம் விம்ம, 
என்னை அறியாமலே 
என் கண்கள் ஈரமானதுவே..
இதயத்தில் ஏதோ ஒரு வலி, 
என் உயிரை கசக்கி 
கழுத்தில் அழுத்தி, 
எச்சில் கூட கனகனக்க.. 
அந்த விநாடி தெரிந்ததடி…
நான் என்னை உன்னிடம் தொலைத்து 
நாட்கள் பல ஆயிற்று என்று

0 comments:

Post a Comment